அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல்
மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று பிறப்பித்த அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார் .
பெருந்தொற்று நோய்கள் அவசர சட்டம் (திருத்தம்) 2020இன் கீழ் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்களிடமிருந்து 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் இந்த அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்திய அரசு இந்த அவசர சட்டத்தை இயற்றியுள்ளது