சுனாமி வந்தாகூட ஸ்டாலின் குறை சொல்வார்.. குறை சொல்ற கட்சி திமுக.. நோயிலும் அரசியலா.. முதல்வர் வேதனை
"சுனாமி வந்தால்கூட ஸ்டாலின் குறை சொல்லுவார்.. குறை சொல்றதுக்கு ஒரு கட்சி இருக்குன்னா அது திமுக கட்சிதான்.. வேற எந்த கட்சியும் கிடையாது... நோயில்கூட இன்னைக்கு அரசியல் செய்றாங்க.. வேதனையா இருக்கு.. ரொம்ப வருத்தப்படறேன்" என்று திமுக தலைவர் முக ஸ்டாலினை முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளாா்,.
ஊரடங்கு அமலில் இருப்பது தொடர்பாகவும், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாகவும், நேற்று மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கொரோனா தடுப்பு குறித்த தமிழக அரசின் செயல்பாடுகளையும், நடவடிக்கைகளையும் விலாவாரியாக எடுத்து வைத்து பேசினார். செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் டக் டக்கென பதில் அளித்தார். அப்போது கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் திமுக தெரிவித்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. முதல்வர் சொன்ன பதில் இதுதான்:
இன்னைக்கு மத்திய அரசிடம், உதவியை கேட்க பெறுகின்ற சூழலில், கேட்கக்கூடிய நிலையில் இருப்பவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.., அவர்களை ஏதாவது வற்புறுத்தினார்களா? அரசை குறை சொல்றாங்களே, இவங்களை எல்லாம் நாட்டு மக்கள் எதற்காக தேர்ந்தெடுத்து அனுப்பினார்கள்?
நோயில்கூட இன்னைக்கு அரசியல் செய்றாங்க.. வேதனையா இருக்கு.. உண்மையிலேயே ரொம்ப வருத்தப்படறேன்.. நல்ல கருத்துக்களை அவர் சொல்லலாம்.. ஆனா எந்த மாநிலத்திலும் இப்படிப்பட்ட நிலைமை கிடையாது... தமிழ்நாட்டிலதான் இப்படிப்பட்ட நிலைமை இருக்கு.. இப்போ வந்திருக்கிற உயிர் காக்கிற பிரச்சனை.. இன்னைக்கு நாட்டு மக்களை காக்க வேண்டும்..